தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க நினைத்து போலீசில் சிக்கிய இளைஞர்!

Published

on

வேலூர் அருகே இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பணம் இல்லாததால் ஒரு வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

#image_title

வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீட்டில் நகைகள் வைத்திருந்த பீரோவை சென்று பார்த்த போதும் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு.

பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை, 750 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் நரேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் திருட்டு நடைபெற்ற பகுதியில் இரவில் மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிந்தது தெரியவந்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் என்ற இளைஞர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து திருடிய நகைகளை பறிமுதல் செய்த காவல்துறை திருட்டுக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு பரிசு அளிக்க பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அர்ஜுன் ராஜ்குமார் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதாகவும் அவர் தற்போது காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

Trending

Exit mobile version