இந்தியா
எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
![Ramesh Pokhriyal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Ramesh-Pokhriyal.jpg)
தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக விரைவுக்குழு அமைத்து மத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், உயர்மட்ட ஆலோசனை குழு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை செயலாளர் தலைமையில் விரைவுக்குழுவை அமைத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழு தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை அமைப்பது குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கிய ஆலோசனைகளைப் பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது. இதனால் ஆங்கில அறிவு இல்லை என்ற அச்சத்தால், தொழில்நுட்ப கல்வியை தவிர்க்கும் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.