வணிகம்
மைக்ரோசாப்ட், கூகுளில் வேலை போச்சா.. என்கிட்ட வாங்க நான் வேலை தர்றேன்.. HCL தரும் நம்பிக்கை!
மைக்ரோசாப்ட் ,அமேசான், கூகுள் பட பல முன்னணி நிறுவனங்களே தங்களுடைய ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் 30,000 ஊழியர்களுக்கு வேலை தர இருப்பதாக HCL நிறுவனத்தின் சிஇஓ பேசியுள்ளது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்தது என்பதும் வேலை இழந்தவர்கள் பலர் புதிய வேலைகளை தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய HCL நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் தங்கள் நிறுவனத்தின் சார்பில் 30,000 ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 18 மாதங்களில் தங்களுடைய ஊழியர்கள் நியமனம் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இன்னும் சுமார் 30,000 ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனம் எதிர்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு பிரிவு என்று AI பிரிவில் ஏராளமான பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இன்றைய டெக்னாலஜி உலகில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டிஜிட்டல் சேவை மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளதை அடுத்து அதில் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பத்திற்காக புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளதாகவும் அவர் அந்த கூட்டத்தில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் உலகில் AI தொழில்நுட்பத்திற்கு அதிக வாய்ப்புகள் நிறைந்து உள்ளது என்றும் செயற்கை நுண்ணறிவு மீது அதிகப்படியான கவனத்தை தங்கள் நிறுவனம் செலுத்த உள்ளதாகவும் அடுத்து 10 ஆண்டுகளில் இதற்காக 10 ட்ரில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விஜயகுமார் அவர்கள் கூறியுள்ளார். எனவே கூகுள் அமேசான் உட்பட பெரிய நிறுவனங்கள் கைவிட்டாலும் HCL ஊழியர்களுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.