தமிழ்நாடு
12ஆம் வகுப்புக்கும் விடுமுறை அளிக்க கோரிக்கை: தமிழக அரசு முடிவெடுக்குமா?
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது/
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் அதனை அடுத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் மூடப்பட்டது என்பதும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு பொதுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் அல்லது பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தலாம் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.