இந்தியா

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!

Published

on

பொதுவாக தூக்கு தண்டனைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போது ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதை பலரும் பாராட்டி, வரவேற்று வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் 4-வயது சிறுமியை மகேந்திர சிங் கோண்ட் என்ற ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கில் சாத்னா கூடுதல் மாவட்ட விசாரணை நீதிமன்றம் அனைத்து கட்ட விசாரணையையும் முடித்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் ஜபல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மகேந்திர சிங் கோண்டுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். மாவட்ட நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 2-ஆம் தேதி காலை 5 மணிக்கு மகேந்திர சிங் கோண்ட் தூக்கிலிடப்பட உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version