தமிழ்நாடு

தோட்டத்தில் வைத்து மாணவியை நாசம் செய்த ஆசிரியர்!

Published

on

வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார் பாலச்சந்திரன் என்ற 23 வயதே ஆன இளைஞர் ஒருவர். அந்த பள்ளியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியின் மீது அந்த ஆசிரியர் ஆசை கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லைதான் கொடுத்து வந்துள்ளார்.

மாணவி ரேகாவுக்கு பள்ளியில் படிக்கும் போது தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஆசிரியர் பாலச்சந்திரன். இந்நிலையில் அந்த மாணவி தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் மாணவியை விடாத அந்த ஆசிரியர் மாணவியின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று மாணவியை சந்தித்து, மாணவியின் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர் பாலச்சந்திரன் தனது காம லீலையை ஆரம்பித்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதை அறிந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் பாலச்சந்திரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version