வணிகம்

உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த இந்திய நிறுவனம்!

Published

on

டிசிஎஸ் என பலராலும் அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி ஐடி நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 170 பில்லியன் டாலராக அதிகரித்தது. பின்னர் ஏற்பட்ட 0.45 சதவீத சரிவால் மதிப்பு 167 பில்லியன் டாலராக சரிந்தது.

நியூயார்க் பங்குச் சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 168 பில்லியன் டாலராக அதிகரித்து அசெஞ்சர் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக டிசிஎஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் இரண்டாம் இடத்திலும், எச்சிஎல் மூன்றாம் இடத்திலும், விப்ரோ 4-ம் இடத்திலும், டெக் மஹிந்தர 5வது இடத்திலும் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version