வணிகம்
ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. Fresher-களுக்கு ஜாக்பாட்.. டிசிஎஸ் அதிரடி!
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் புதியதாக 40,000 பேரை புதிதாக பணிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் வணிகங்கள் முடங்கியுள்ளன. ஐடி துறையில் மிகப் பெரிய பணி நீக்கம் இருக்கும். புதியதாக பணிக்கு எடுப்பது மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், டிசிஎஸ் நிறுவனம் புதியதாக 40 ஆயிரம் பேரை பணிக்கு எடுப்பது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு பணி நீக்கம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
மறுபக்கம், ஊழியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, நடப்பு ஆண்டில் சம்பள உயர்வு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி – மார்ச் மாதம் வரையிலான 4-ம் காலாண்டில் 8,093 கோடி ரூபாய் நிகர லாபத்தை டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.