வணிகம்
5 லட்சம் ஊழியர்கள்.. 9 ஆயிரம் கோடி நிகர லாபம்.. டிசிஎஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு!
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டிசிஎஸ். 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது.
முதல் முறையாக டிசிஎஸ் நிறுவனத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 20,409 ஊழியர்கள் புதிதாக டிசிர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு காலாண்டில் இணையப்பட்ட அதிகபட்ச ஊழியர்கள் எண்ணிக்கை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் சராசரியாக 17.3 சதவீதம் வரையில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தமாக 5,09,058 ஊழியர்கள் தற்போது வேலை செய்து வருகின்றனர்.
டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக 8.6 சதவீதமாக உள்ளது. ஐடி துறையில் இது மிகவும் குறைவு.
காலாண்டு லாபம் சராசரியாக 29 சதவீதம் அதிகரித்து வருகிறது. கொரோனா 19 காரணமாகத் அதிகரித்துள்ள டிஜிட்டல் தேவை காரணமாக ஐடி சேவைகள் தேவை அதிகரித்துள்ளது. டிசிஎஸ் நிகர லாபம் 9,008 கோடி ரூபாய். சென்ற ஆண்டு இதே காலாண்டில் நிகர லாபம் 7,008 கோடியாக இருந்தது.
டிசிஎஸ் நிறுவன வருவாய் 18.5 சதவீதம் அதிகரித்து 45,411 கோடி ரூபாயாக உள்ளது.
வியாழக்கிழமை சந்தை நேர முடிவில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் 18.20 புள்ளிகள் சரிந்து 3,257.10 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. காலாண்டு முடிவில் வெளியாகியுள்ள சாதகமான முடிவுகளால் இன்று பங்குகள் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.