வணிகம்
ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தரா.. ஊழியர்கள் நிலை என்ன?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமமும் ஏர் இந்தியா உடன் விஸ்தரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் எர்லைன்ஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் முதலீட்டைச் செய்ய உள்ளது.
விஸ்தரா – ஏர் இந்தியா இணைவுக்குப் பிறகு, ஏர் இந்தியா நிறுவனத்தில் 25.1 சதவிகித பங்குகள் வழங்கப்படும்.
2024 மார்ச் மாதத்திற்குள் ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தரா ஏர் லைன்ஸ் முழுமையாக இணைந்துவிடும்.
ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா ஏர்லைன் நிறுவனம் இணைவது குறித்து, விஸ்தரா ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கண்ணன், “ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.
இணைவுக்குப் பிறகு பல்வேறு வாய்ப்புகள் ஊழியர்களுக்குக் கிடைக்கும். இது ஒரு நீண்ட கால இணைவு. இப்போதைக்கு வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்திக்கு விஸ்தரா மட்டுமல்லாமல், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் பங்குகள் உள்ளன. இந்த இணைவுக்குப் பிறகு ஏர் இந்தியாவுடன் – ஏர் ஏசியா நிறுவனமும் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.