ஆட்டோமொபைல்

கார் விலையை திடீரென உயர்த்திய டாடா.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published

on

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஜனவரி 19-ம் தேதி முதல் பயணிகள் வாகன விலையை 0.9% உயர்த்துவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கார் உற்பத்திக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் செலவு அதிகரித்துள்ளதால், தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு ஜனவரி 18-ம் தேதி வரை புக்கிங் செய்தவர்களுக்கு கிடையாது. ஜனவரி 19-ம் தேதி முதல் கார் புக் செய்பவர்கள் இந்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி வரும்.

டாடா மோட்டார்ஸின் இந்த விலை உயர்வு அதிக டிமாண்ட் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே. குறைந்த அளவில் புக்கிங் செய்யப்படும் வாகனங்களில் விலையை 10 ஆயிரம் ரூபாய் வரையில் டாடா நிறுவனம் குறைத்தும் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version