வணிகம்

தமிழ்நாட்டில் ரூ.25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Published

on

டாடா குழுமம் தமிழ்நாட்டில் 25,000 ஓடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் தமிழ்நாடு முதல்வரை டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் சந்தித்துப் பேசியது செய்திகளாக வெளியாகின.

இந்நிலையில் இந்த சந்திப்பின் போது டாடா குழுமம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் செய்ய உள்ள பல்வேறு முதலீடு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா நிறுவனம் சோலார் செல்கள் உற்பத்தி செய்யும் ஆலையை மிகப் பெரிய முதலீட்டில் நிறுவ உள்ளது.

மேலும் ஓசூரில் டாடா குழுமத்திற்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை விரிவுபடுத்தவும், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version