Connect with us

தமிழ்நாடு

ரூ.1000 கோடியை நெருங்கியது 2 நாள் டாஸ்மாக் விற்பனை!

Published

on

தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 12 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 14 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை பயன்படுத்தி குடிமகன்கள் மது வகைகளை வாங்கி குவித்தனர். ஒவ்வொருவரும் ஒரு பெரிய பைகள் நிறைய மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பெரும்பாலான மதுப்பிரியர்கள் 2 வாரங்களுக்கும் சேர்த்து மொத்தமாக மது வகைகளை வாங்கி குவித்துள்ளனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 854 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 428.6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகின்றன. ஏற்கனவே சனிக்கிழமையும் 400 கோடிக்கு மேல் விற்பனையாகி வந்த நிலையில் இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தமாக 854 கோடிக்கு விற்பனையாகி உள்ளது

ஊரடங்கு காரணமாக இன்று முதல் 14 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கும் என்பதால் மொத்த மொத்தமாக மது பிரியர்கள் மதுக்களை வாங்கிச் சென்றுள்ளனர். கொரோனா காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்ற அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது வகைகளை அருந்தக்கூடாது என மருத்துவர்கள் ஒருபக்கம் அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசு மதுக்கடைகளை மாலை 6 மணி வரை திறந்து கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு இரண்டு நாட்களில் மது விற்பனை செய்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!