செய்திகள்
டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரம் மாற்றம் …. தமிழக அரசு அதிரடி….
தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ துவங்கியது. எனவே, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பார்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா தொற்று குறைந்த பின் காலை 8 மணி முதல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அதன்பின் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது.
தற்போது இந்த நேரம் மற்றி அமைக்கப்பட்டு முன்பு இருந்தது போலவே 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு இரவு 8 மணிக்கு மேல் பணியை விட்டு வீட்டுக்கு செல்லும் குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்து வந்தனர். அவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்தாலும் காலை 10 மணிக்கு கட்டிங்கை போடுபவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.