தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published

on

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளின் நேரம் 10 மணி முதல் 8 மணி வரை இருந்த நிலையில் திடீரென தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12 மணி முதல் 10 மணி வரை மாற்றியது.

இந்த நேர மாற்றம் தொழிற்சங்க ஊழியர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் செய்ததாகவும் 20 நாட்களுக்கு முன்னர் முறைப்படி எந்த நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால் பணப்புழக்கம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்கள் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்பதற்கும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version