தமிழ்நாடு

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக் நிர்வாகம்!

Published

on

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்றும் நாளையும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறந்து கொள்ளலாம் என்றும் இன்றும் நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்குவதற்கு வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத்துடன் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலையும் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பதால் குடிமகன்கள் இரண்டு வாரத்துக்கு தேவையான சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version