தமிழ்நாடு

நேற்று ஒரே நாளில் ₹159 கோடி மது விற்பனை… சென்னையில் எவ்வளவு வசூல் தெரியுமா?

Published

on

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 159 கோர்டி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

புத்தாண்டு தினம் உள்ளிட்ட எந்த பண்டிகை என்றாலும் தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் சாதனை ஒவ்வொரு பண்டிகைக்கும் விஞ்சியே வரும். இந்த புத்தாண்டு தினத்துக்கும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் டாஸ்மாக் புதிய மது விற்பனைச் சாதனையைப் புரிந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 48.75 கோடி ரூபாய் மது விற்பனை வசூல் நடந்து உள்ளது. கோவையில் 28.40 அதிகபட்சமாக கோடி ரூபாய்க்கும் மதுரையில் நேற்றைய விற்பனை வசூல் 27.30 கோடி ரூபாய்க்கும் திருச்சியில் 28.10 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 26.49 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை கண ஜோராக நடைபெற்றுள்ளது.

Trending

Exit mobile version