செய்திகள்
சொன்னா நம்புவீங்களா!.. தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக்..
![TASMAC 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/TASMAC-1.jpg)
தமிழகத்தில் தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துவது என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகமெங்கும் கடைகள் உருவாக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் மூலம் அரசுக்கு பல கோடிகள் வருமானமாக கிடைக்கிறது, டாஸ்மாக் வருமானத்தில்தான் அரசே நடக்கிறது என்கிற எண்ணம் பொதுவாக சாமானிய மக்களுக்கு உள்ளது. அதுவும் தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு ஆகிய நாட்களில் ஒரு நாளில் ரூ.200 கோடி முதல் 300 கோடி வரை டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஆனால், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக 2012-2013ம் ஆண்டில் ரூ.103.64 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.