தமிழ்நாடு

மதுப்பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஓர் சோகச் செய்தி..!

Published

on

கொரோனா தொற்று இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 14 நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

14 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால், மதியம் 12 மணி வரையில் திறக்கப்பட்டு வந்த மதுக்கடைகளை இன்றும், நாளையும் மாலை 6 மணி திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்கள் மூடப்படும் என்ற செய்தி மதுப்பிரியர்கள் இடையில் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மதுப்பிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version