தமிழ்நாடு

மே 7 சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது.. தமிழக அரசு அதிரடி!

Published

on

மூன்றாம் கட்ட ஊரடங்கில் மே 7-ம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் கீழ் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் மே 7-ம் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் டாஸ்மாக் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கட்டுப்பாடுகள்:

1) மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுக் கூடாது.
2) மதுபானம் வாங்கும் போது இரண்டு நபர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3) மதுபானக் கடைகளில் ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு அதிகமாக கூட்டம் கூடாது.
4) டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே திறக்கப்படும்,
5) அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
6) பார்களில் மது பானம் அருந்த அனுமதி கிடையாது.
7) மதுபானக் கடைகளில் கூட்டம் சேராமல் தடுக்க கூடுதல் நபர்களை பணியமர்த்தலாம்.

seithichurul

Trending

Exit mobile version