தமிழ்நாடு
ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்வு: டாஸ்மாக் மதுபானங்களின் புதிய விலையின் முழு விபரங்கள்!
டாஸ்மாக் மதுபானங்களின் விலை செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்படவுள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விலை உயர்வின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லிஸ் ஐரிஸ், வோட்கா ஆகிய மதுபானங்களை டாஸ்மாக், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது
இந்த மதுபானங்களின் விலையை ரூபாய் 10 முதல் ரூபாய் 500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த ரக மதுபானங்கள் விலை ரூபாய் 10ம், நடுத்தர ரக மதுபானங்கள் விலை ரூபாய் 300ம், உயர் ரக மதுபானங்கள் விலை ரூபாய் 500ம் உயர்த்தப்பட்டுள்ளது
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் தற்போதுதான் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு குறித்த முழு விவரம் இதோ: