இந்தியா

’உப்பு போட்டு சாப்புடுவாங்க போல’ டாப்ஸியின் டுவிட்டுக்கு நெட்டிசன் பாராட்டு

Published

on

ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா? என நடிகை டாப்சி கேள்வி எழுப்பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல பாப் பாடகி ரிஹானா அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் ரிஹானாவின் டுவீட்டிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத இந்த பிரபலங்கள் ரிஹானாவின் டுவீட்டிற்கு பின்னர் திடீரென பொங்கி எழுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த நிலையில் ஒரே ஒரு ட்வீட்டிற்கு இத்தனை எதிர்ப்பா? என்ற வகையில் நடிகை டாப்சி தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்து அசத்தியுள்ளார். ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைக்கிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை குறைக்கிறது அல்லது ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குறைக்கிறது என்றால் உங்களின் மதிப்பை வலுப்படுத்துவதற்கு நீங்கள் பணியாற்ற வேண்டுமே தவிர நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சாரகராக ஆக கூடாது என்று தெரிவித்துள்ளார்

டாப்ஸியின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ‘சோத்துல உப்பு போட்டு சாப்பிடுவாங்க போல’ என்று ஒரு நெட்டிசனும், ’சுயமாக சிந்திக்கத் தெரிந்த தன்மானம் மிக்க நபர்’ என இன்னொருவரும் கூறியுள்ளார்

Trending

Exit mobile version