சினிமா

நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா!

Published

on

நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன், இந்தி படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த சில வாரங்களுக்கு முன் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது நானா படேகர் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார். ஆனால் தாம் கூறியது உண்மை என்று உறுதியாகத் தெரிவித்த நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த, நானா படேருக்கு ஆதரவாவும், தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். தவறான பெண் தனுஸ்ரீ தத்தா என்று குறிப்பிட்டிருந்தார். தனுஸ்ரீ தத்தா, ராக்கி சவாந்த் மீது 10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய புகார்கள் அனைத்துமே பொய் என்று விளக்கியுள்ளார். மேலும் தனுஸ்ரீ தாத்தாவுக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும் ராக்கி சாவந்த் வலியுறுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version