தமிழ்நாடு
தஞ்சை மாணவி தற்கொலை: வீடியோ பதிவு செய்தவர் ஆஜராக உத்தரவு
தஞ்சை மாணவி தற்கொலை செய்த வழக்கில் அவரது வீடியோவை பதிவு செய்தவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் நாளை போலீசில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மாணவியை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட செல்போனையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வீடியோவின் உண்மை தன்மையை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர்கள் நாளையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் வீடியோவில் உள்ளது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்ய வீடியோ பதிவான செல்போன் தேவை என்றும் செல்போனை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி வியாழக்கிழமை மாலை போல் விசாரணை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.