தமிழ்நாடு
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க கோரி தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வேண்டுமென மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.