செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு…

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியது. குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 5098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்து கோவையில் 5098 பேரும், செங்கல்பட்டில் 1332 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1525 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Trending

Exit mobile version