செய்திகள்

தமிழகத்தில் அதிகரித்து கொண்டே போகும் கொரோனா!.. இன்று எத்தனை பேர் தெரியுமா?…

Published

on

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது.

சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் கடந்த சில நாட்களாக இது படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,989 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து, செங்கல்பட்டில் 2854 பேரும், கோவையில் 1732 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரு நாளில் 11 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் 10,988 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version