செய்திகள்
தமிழகத்தில் இருந்து சென்றமீட்புப் படையினர்.. மீண்டும் கேரளாவில் மழை
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது.
கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அங்கு மீட்பு படை விரைந்துள்ளது.
வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மீட்புப் படை விரைந்தது. அரக்கோணத்திலிருந்து மீட்புப் படையினர் காலையில் அங்கு சென்றுள்ளனர்.