செய்திகள்

தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவையா? – உலக சுகாதார விஞ்ஞானி பரபரப்பு தகவல்

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே, மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள் மற்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியது. குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது.

எனவே, விரைவில் முன்பு இருந்தது போல் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்கிற கலக்கம் பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ‘தமிழகத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவைப்படாது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதுமானது’ என தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்து பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

Trending

Exit mobile version