தமிழ்நாடு

நான் தனி ஒருவன்.. செய்தியாளர் சந்திப்பில் தெறிக்கவிட்ட பொன்.மாணிக்கவேல்!

Published

on

சென்னை: டிஜிபியிடம் தன் மீது புகார் அளித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். சென்னை இன்று பேட்டியளித்த அவர் தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்,மாணிக்கவேல், என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது. என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே. என் மீது புகார் அளித்த 21 காவல் அதிகாரிகளும் ஒரு எப்.ஐ.ஆரை கூட இதுவரை பதிவு செய்யவில்லை. என் மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை.

என் மீது அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது.என் மீது புகார் அளித்தவர்களை சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். யாரோ இவர்களை எல்லோரையும் இயக்குகிறார்கள். அவர்களை விரைவில் வெளியே சட்டத்திற்கு முன் கொண்டு வருவேன்.

சிலைத் தடுப்பு்ப பிரிவில் உள்ளவர்ளைக் கொண்டு ஒரு சிலையை கூட மீட்கவில்லை. எல்லாம் நானாக பயன்படுத்திய அதிகாரிகள். சிறப்பு அதிகாரிகள் மட்டும்தான் எனக்கு உதவினார்கள். என் மீது ஆதாரமில்லாமல் புகார்களைத் தரக் கூடாது என்று பொன். மாணிக்க வேல் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version