தமிழ்நாடு

மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழிசை புகழாரம்!

Published

on

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தது முதல் தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஆரம்பித்தது. முதலில் ஓபிஎஸ் முதல்வராக இருந்தார், பின்னர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் அவர் முன்னால் பல்வேறு அரசியல் சவால்கள் இருந்தது. இதனால் இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற அரசியல் நிலையற்ற தன்மை நீடித்து வந்தது. ஆனால் தற்போது அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். அரசு நீடித்துதான் வருகிறது.

இந்நிலையில் இதனை பாராட்டும் விதமாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3-வதுஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version