தமிழ்நாடு
புதுவை முதல்வராகிறாரா தமிழிசை? நாராயணசாமியின் திடுக்கிடும் தகவல்!
தமிழகத்தில் பாஜகவின் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர வைப்போம் என்றும் சூளுரை செய்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன் என்பது தெரிந்ததே. ஆனால் அதன்பின் அவர் தெலுங்கானா கவர்னர் ஆகி விட்டார் என்பதும், தற்போது அவர் புதுச்சேரிக்கும் கவர்னராக உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் புதுவையில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து கவர்னர் தமிழிசை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் அறிவித்த அறிவிப்பு புதுவை பள்ளி மாணவர்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு.
மேலும் தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர் தான் தமிழிசை சௌந்தரராஜன் என்றும் தற்போது புதுவை முதல்வராக ஆசைப்படுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். நாராயணசாமியின் இந்த திடுக்கிடும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.