தமிழ்நாடு

பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்த தமிழிசை: வைரலாகும் புகைப்படம்!

Published

on

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் 5 மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததை வெற்றிகரமான தோல்வி என கருத்து தெரிவித்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும், ஊடகத்தினருக்கு தீணி போட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சிறிய மேடை அமைத்து அதில் மைக்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முதலில் அவருக்கு மைக் வைத்திருந்த மேடையின் உயரம் சரியாக எட்டவில்லை. இதனையடுத்து உயரமாக நிற்க ஸ்டூல் ஏதாவது கொடுங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டார் தமிழிசை. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்த ஒரு தண்ணீர் எடுக்கும் பக்கெட்டை எடுத்து அதை கவிழ்த்து வைத்து அதன் மீது தமிழிசையை நிற்க வைத்து பேட்டியளிக்க வைத்தனர்.

இதனை ஊடகத்தினர் அருகில் நின்ற யாரோ தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ எப்படியோ மீம் கிரியேட்டர்கள் கைக்கு கிடைக்க அவர்கள் டிவியில் ஒளிபரப்பான வீடியோவையும், பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளிக்கும் வீடியோ சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version