தமிழ்நாடு
பாஜக தனித்து போட்டியிட தயார்: தமிழிசை அதிரடி!
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும் தொகுதி பங்கீட்டிலும் ஆர்வமாக உள்ளன. இந்நிலையில் பாஜக தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும். திமுக,காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளோடு கூட்டணி அமைக்க முயற்சிக்கிறோம் என்றார். இதனையடுத்து அவரிடம் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழிசை, அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார். இன்றைய சூழ்நிலையில் கூட்டணி அமைவது தேவையானது, காலத்தின் கட்டாயம். வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அவசியம். எனவே கூட்டணி அமைவது தவிர்க்க முடியாதது என பதிலளித்தார்.