தமிழ்நாடு

5 மாநில தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம்: தமிழிசை கருத்து!

Published

on

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இது நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களில் வர உள்ள நிலையில் இந்த ஐந்து மாநில தேர்தல் அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் பாஜக தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மிசோரத்தில் எம்.என்.எப். கட்சி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறிய காங்கிரஸ் கட்சி தற்போதுமன்னிப்பு கேட்க வேண்டும். மோடி அலை ஓயவே ஓயாது. எந்த காலத்திலும் மோடி அலையை ஓயவைக்க முடியாது. மோடி அலையை ஓயவைக்க பெரிய தலை எதுவும் இல்லை.

வெற்றி வந்தால் துள்ளுவதும் இல்லை; தோல்வி வந்தால் துவண்டுபோவதும் இல்லை. நாங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கவில்லை. இந்த தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாராளூமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைப்போம் என்றார்.

Trending

Exit mobile version