தமிழ்நாடு

நடிகர் சூர்யா கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்: தமிழிசை பதிலடி!

Published

on

பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யாவை பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில் நாடுமுழுவதும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டுவந்து, இந்தி கட்டாயமல்ல, அவரவர் விருப்பம் போல படிக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஆவேசமாக பேசினார். நீட்டுக்கு எதிராகவும், அனைவருக்கும் சமமில்லாமல் உள்ள கல்விமுறைக்கு எதிராகவும் சூர்யா பேசியது பலரை ஈர்த்துள்ளது. புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன என சூரியா கூறியதையடுத்து பலரும் அதுபற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். இதனால் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறு உள்ளது.

இந்நிலையில் சூர்யாவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் நல்ல கல்வி, அனைவருக்கு சமமாக கல்விக் கொடுப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள். கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்களும் பேசுகிறார்கள்.

இந்த புதிய கல்விக் கொள்கையை அதைப் பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள். உதய சூரியனை சின்னமாக கொண்டவர்தான் பேசுகிறார்கள் என்றால், நடிகர் சூர்யாவும் பேசுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை உசிலம்பட்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.

Trending

Exit mobile version