தமிழ்நாடு

தூத்துக்குடியில் தோல்வி: இரவில் கண்ணீர் விட்டு அழுத தமிழிசை!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் தமிழிசை. மத்தியில் பாஜக 303 இடங்களை தனித்து கைப்பற்றினாலும் தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது.

இதனால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்!! என தெரிவித்துள்ளார்.

தமிழிசை தான் தோற்றதற்காக அழவில்லையாம், தங்களை நிராகரித்த தமிழகத்தை நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என பாஜக அமைச்சர் நிதின் கட்காரி கூறியதை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டாராம். விரைவில் தமிழக பாஜக தலைமை மாற்றப்படும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version