Connect with us

தமிழ்நாடு

வைகோ இவ்வாறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழிசை காட்டம்!

Published

on

மாநிலங்களவையில் தமிழக நலன் மற்றும் பல்வேறு விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதில் இருந்தே தனது பேச்சுக்களால் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய வைகோ, தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு தமிழகம் உள்ளாகும் பேராபத்து உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும் என்றார்.

இந்நிலையின் வைகோவின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வைகோ தொடர்ந்து எதிர்மறையாக பேசிவருவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சோமாலியா, நாகசாகி, ஹிரோஷிமா என அழிந்த பகுதிகளை தமிழகத்துடன் ஒப்பிடுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். வைகோ நினைப்பதைப் போல தமிழகம் அழிவுப் பாதைக்குச் செல்லவில்லை.

பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்தான். தமிழகத்திலுள்ள சாமானியனின் உயிர் காக்கப்படுவதை தமிழகம் அழிக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறாரா? பயிர் காப்பீட்டுத் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம்தான், மோடி அரசில் தமிழகம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் என்று பதில் அளித்தார்.

தினபலன்49 seconds ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!