தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராக்கி கட்டிய தமிழிசை!

Published

on

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தோடு ரக்சா பந்தன் விழாவும் கொண்டாடப்பட்டது. ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கைகளில், மஞ்சள் நூல் அல்லது அலங்காரம் செய்யப்பட்ட ராக்கி கட்டி மகிழ்வர்.

இந்த பண்டிகை வட மாநில பண்டிகை என்றாலும் தமிழகத்திலும் ஆண்டு தோறும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை ராக்கி கட்டி ரக்சா பந்தனை கொண்டாடினார். சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது முதல்வருக்கு, தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கட்டி ரக்சா பந்தனை கொண்டாடினார். மேலும் பல வட மாநில பெண்கள் முதல்வரின் இல்லத்துக்கு சென்று ரக்கி கட்டி ரக்சா பந்தனை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Trending

Exit mobile version