தமிழ்நாடு

மறுபடியும் முதல்ல இருந்தா? ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுத்து வர காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தீவிர முயற்சி செய்தார். அவரது முயற்சியின் பலனாக தீவிர அரசியலில் இறங்கப் போவதாகவும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் ரஜினி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஆனால் திடீரென அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் விரக்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது அரசியலில் இருந்து கிட்டத்தட்ட விலகி விட்ட ரஜினிகாந்த் அரசியல் குறித்து எதுவும் பேசுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மறுபடியும் முதல்ல இருந்தா? மீண்டும் அரசியலா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். ஆனால் இது ஒரு சாதாரண சந்திப்புதான் என்றும் மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் ரஜினிகாந்த் மற்றும் தமிழருவி மணியன் வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version