தமிழ்நாடு

அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை: மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலிருந்து தொடங்குகிறது!

Published

on

அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் தெரிவித்து உள்ளார்.

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று பல காலமாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் அது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது பற்றி இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

முதல்நிலை கோயில்களில் முதல் கட்டமாக தமிழில் அர்ச்சனைத் தொடங்கப்படும். முதற்கட்டமாக வரும் புதன் அல்லது வியாழன் கிழமை முதல் மைலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக் கோயிலில் இருந்து இந்த தமிழ் வழி அர்ச்சனை என்பது நடைபெறும்.

இது குறித்த விளம்பரப் பதாகைகள் கோயில்களில் வைக்கப்படும். தொடர்ந்து இந்தத் திட்டம் அனைத்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு தகவல்களைத் தெரிவித்து உள்ளார் அமைச்சர் பி.கே. சேகர் பாபு.

seithichurul

Trending

Exit mobile version