சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை!

Published

on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலில் தேனாண்டால் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தான் தோற்றதை ஒப்புக்கொள்ள மாட்டேன். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம்சாட்டினார்.

அதோடு இல்லாமல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

டி.ராஜேந்தர் தலைமையிலான தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேனாண்டால் பில்ஸ்ம் முரளி, “இதுபோல தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த எச்சரிக்கை பாரதிராஜா தலைமையில் உருவாகியுள்ள நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்ற உடன் பாரதிராஜா தேனாண்டால் பிலிம்ஸ் முரளியைப் பாராட்டினார். எனவே இவர்கள் சமாதானமாகப் போக வாய்ப்புள்ளது.

ஆனால் டி.ராஜேந்தர் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக புதிய சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். டிம்சபர் 5-ம் தேதி தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்படி தான் இந்த எச்சரிக்கை வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version