சினிமா செய்திகள்

என் படத்துக்கு அப்புறம் சிறந்த படம் ‘த்ரிஷயம் 2’ தான்: காமெடி செய்த தமிழ் இயக்குனர்!

Published

on

என்னுடைய படத்திற்கு பின்னர் மிகச்சிறந்த இரண்டாம் பாகம் திரைப்படம் ‘த்ரிஷயம் 2’ திரைப்படம் தான் என தமிழ்படம் இயக்குனர் காமெடியாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷயம்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ‘த்ரிஷயம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது என்பதும் முதல் பாகத்தைப் போலவே ‘த்ரிஷயம் 2’ படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் கிட்டத் தட்ட அனைத்து இரண்டாம் பாகம் படங்களும் தோல்வியில்தான் முடிந்துள்ளன. அந்த வகையில் ‘த்ரிஷயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வெற்றி பெற்று உள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தநிலையில் தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனர் சி.எஸ். அமுதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப்படம் 2’ என்ற படத்தை இயக்கினார் என்பதும், வழக்கம்போல இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது டுவிட்டரில் காமெடியாக எனது படத்தை அடுத்து வெற்றி பெற்ற இரண்டாவது பாக திரைப்படம் ‘த்ரிஷயம் 2’ படம் தான் என காமெடியாக குறிப்பிட்டுள்ளார். இந்த காமெடி ட்விட்டிற்கு நெட்டிசன்கள் நக்கலுடன் கூடிய கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version