செய்திகள்
தமிழக பெண்களுக்கு ரூ.1000 யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்கும்? கிடைக்காது?
உரிமைத்தொகை
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு திமுக ஆட்சியின் சார்பில் ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நெறிமுறைகள்
ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை பெறுவதற்கு 21 வயது நிரம்பிய பெண்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.
இவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது…
நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் மற்றும் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து வரும் நிறுவன உரிமையாளர்கள், முதியோர், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவர்களுககு ரூ.1000 கிடையாது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி, வாரியங்கள் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், கூட்டுறவு ஊழியர்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற ஊழியர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.1000 கிடையாது. மேலும், குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பத் தலைவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 12 ஆதாரங்கள் கட்டாயம்
குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற, ஒரு குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது, என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும்.
1) குடும்ப அட்டை எண்
2) ஆதார் எண்
3) தொலைப்பேசி எண்
4) புகைப்படம்
5) வயது
6) மாவட்டம்
7) தொழில்
8) வாடகை வீடா? சொந்த வீடா?
9) நிலம் வைத்திருப்பவரா?
10) வாகனம் வைத்து உள்ளவரா
11) வங்கிக் கணக்கு
12) உறுதிமொழி
பொது விநியோக நியாய விலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும்.