தமிழ்நாடு
2010க்கு பிறகு இதுதான் கனமழை: புதிய காற்றழுத்த தாழ்வு குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!
![tn weatherman1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/tn-weatherman1200.jpg)
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பெய்யப் போகும் மழைதான் கன மழை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோற்றிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது தெரிவித்துவரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் குமரி பகுதியில் பெய்யப்போகும் மிக கனமழை இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மழை மூன்று நாட்கள் நீடிக்கும் என்றும் முதல் ஒன்றரை நாட்கள் மிக அதிகமாக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்/ மேலும் வரும் திங்கட்கிழமையில் இருந்து படிப்படியாக மழை குறையும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னைக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது என்று கூறப்பட்டிருப்பது சென்னை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Heaviest rains in Kumari since the December 2010 spells. The rains are now extending into 3rd day and 1& 1/2 more day of rains they have endure. From Monday noon will reduce in kumari. Kerala needs to be in high alert for next 2 days too as the surge from two system is pushed in.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 13, 2021