தமிழ்நாடு
சென்னை மக்களுக்கு ஆறுதலான செய்தி கூறிய தமிழ்நாடு வெதர்மேன்!
சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் வெயில் அடிக்கத் தொடங்கிவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் அதனால் மழைநீரில் சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து நேற்று லேசான வெயிலும் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நேற்று இரவு திடீரென சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் இன்று மீண்டும் சென்னையில் பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன போக்குவரத்தில் பெரும் சிக்கலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் மழை படிப்படியாக குறைந்து விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் படிப்படியாக மழை நின்று விடும் என்றும் சூரியன் சிறிது நேரத்தில் கடல் பக்கத்தில் உள்ள பகுதிகளில் மெதுவாக எழும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து படிப்படியாக மழை குறைந்து சூரியன் திரும்பி வருவதை சென்னை பொதுமக்கள் பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் கூறியிருப்பது பொது சென்னை மக்களுக்கு ஆறுதலான செய்தியாக உள்ளது.
Rain will stop and sun will come back shortly slowly from areas from sea side 1st to interior parts of city.
———
It was Chennai Specific cell, that gave sharp intense spell. From the areas close to sea, the rains should stop slowly and even we can see sun coming back. pic.twitter.com/Mfiktz248M— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 22, 2021