தமிழ்நாடு
சென்னையை புயல் தாக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது காற்றழுத்த மண்டலமாக நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
வங்ககடலில் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நவம்பர் 10 முதல் 12 வரை கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்றும் அது புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறதோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இதன் காரணமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்பதை 12ஆம் தேதி தான் உறுதியாக சொல்ல முடியும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு மேலே மிக அதிகமான மேகங்கள் சூழ்ந்து இருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் பாண்டிச்சேரி முதல் கடலூர் வரை உள்ள பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.