தமிழ்நாடு
உக்ரைன் ராணுவத்தில் கோவை இளைஞர்: உளவுத்துறை கண்டுபிடித்ததால் பரபரப்பு!
உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் ஒருவர் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் செய்துவருவதை இந்திய உளவுப்படை கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் மட்டும் இந்தியாவுக்கு திரும்பாமல் உக்ரைன் இராணுவத்தில் இணைந்து உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த மாணவர் நிகேஷ், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய முயற்சி செய்ததாகவும் ஆனால் அவரது உயரம் குறைவாக இருந்ததால் அவருக்கு இந்திய ராணுவத்தில் இடம் கிடைக்கவில்லை என்றும் இதனை அடுத்து மருத்துவம் படிக்கச் உக்ரைன் சென்ற அவர் தற்போது போர் காரணமாக ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணிக்கு நடைபெற்றபோது அதில் சேர்ந்து உள்ளதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தில் பணிபுரியும் தமிழக மாணவரை, அந்நாட்டின் ராணுவத்தில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது