தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேட் நியூஸ்!!

Published

on

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தபட்டுப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தேர்வை நடத்தியது.

இந்த நிலையில், தற்போது அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில், பள்ளி நிர்வாகம் விரும்பினால் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்தி கொள்ளலாம்’ இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version