வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வேலை!

Published

on

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியிடங்கள் 14 உள்ளது. இதில் உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

வேலை செய்யும் இடம்: நாகப்பட்டினம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை: அலுவலக உதவியாளர் – 08
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: எழுத்தர் – 01
மாத சம்பளம்: ரூ.15,900 – 50,400

வேலை: ஈப்பு ஓட்டுநர் – 02
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000

வேலை: இரவுக்காவலர் – 03
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: குறைந்தபட்ச வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்திச் செய்த விண்ணப்பங்களைத் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2019/11/2019111987.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.12.2019

Trending

Exit mobile version